Friday, July 23, 2010

கவிஞர்.பூவை செங்குட்டுவன்



கவிஞர்.பூவை செங்குட்டுவன்

கவிஞர்.பூவை செங்குட்டுவன் இயற்றிய காலத்தை வென்ற பாடல்கள் சில :

1. தாயிற்சிறந்த கோயிலுமில்லை ( அகத்தியர் )
2.ஏடுதந்தானடி தில்லையிலே ( ராஜராஜசோழன் )
3.இறைவன் படைத்த உலகை ( வா ராஜா வா - வயலின் மேதை குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைத்த
முதல் திரைப்படம் இது )
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ( புதிய பூமி படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்
டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்த பாடல் பட்டிதொட்யெங்கும் ஒலித்து எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர்களால் மிகுந்த
வரவேற்பை பெற்ற பாடல் )
5.ராதையின் நெஞ்சமே ( கனிமுத்துப்பாப்பா )
6.காலம் நமக்கு தோழன் ( பெத்த மனம் பித்து )
7.காலம் எனக்கொரு ( பெளர்ணமி என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்)
8.வானம் நமது தந்தை ( தாகம் )
9.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ( கந்தன் கருணை, இசை : கே.வி.மகாதேவன் )
10.ஆடுகின்றானடி தில்லையிலே ( கந்தன் கருணை , இசை : கே.வி.மகாதேவன் )
11.திருப்புகழைப் பாட பாட ( கெளரி கல்யாணம் , இசை : எம.எஸ்.விஸ்வநாதன் )
12.வணங்கிடும் கைகளில் ( கற்பூரம் )
13.வணக்கம் சிங்கார ( காதல் வாகனம் )
14.திருநெல்வேலி சீமையிலே ( திருநெல்வேலி , இசை :இளையராஜா )

' தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் தமிழகமெங்கும் வலம்வந்து பின்னாளில் 'சூலமங்கலம் சகோதரிகளாக' புகழ் பெற்றவர்களுக்காக இசையுலக வாழ்வின் ஆரம்பம்முதலே பல பாடல்களை
இயற்றியவர் கவிஞர்.பூவை செங்குட்டுவன் .

No comments:

Post a Comment